செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.
ஆங்கில புதுவருட 2021
திரு.கதிரமலை தம்பிமுத்து இறைபதம் அடைந்தார்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
திரு.கந்தையா கணபதிப்பிள்ளை
துயர் பகிர்வோம்

திரு.கந்தையா கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) பிறப்பு : Dec .15.1924 உதிர்வு: Nov .26 2020
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர் திரு.கந்தையா கணபதிப்பிள்ளை இன்று (Nov .26-2020) வியாழக்கிழமை ஹற்றனில் (Sri Lanka ) சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மயில்வாகனம் – லட் சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகம்மாவின் அன்புக் கணவரும் ரோகினிதேவி (America) , சியாமளா (Hatton ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் அன்புத் தந்தையும் முத்துவேல்,சிவகுமார்,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,விஜயகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனும் சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன், சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் காலம் சென்றவர்களான சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலம் சென்றவர்களான ராமசாமி பண்டிதர், வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரவணமுத்து, சிவசுப்பிரமணியம், சிவகாமி அம்மை, கதிரவேலு, அன்னபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும் சபாரத்தினம் (அமரர்), ராஜகுலசிங்கம்(அமரர்), மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் Hatton இல் நாளை வெள்ளிக்கிழமை (Nov 27-2020) நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தொடர்புகளுக்கு:
பிள்ளைகள்
ரோகினி ( மகள் – USA ) 920- 4263168
சியாமளா (மகள் -Srilanka ) 051-2223390
சோமாஸ் (மகன்- Canada) 416-2994946
நாகேஸ்வரி (மகள் -Canada ) 905-2015769
அருள்மொழி (மகள் -Canada ) 416-2899163
அருள்மோகன் (மகன் -Canada ) 416-2890727
ரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை – சொல்லாமல் செய்யும் பெரியோர்
கனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்காக எமது கிராமத்தவர்கள்சார்பில் அண்மையில் எம்மால் சேகரிக்கப்பட்ட உதவுதொகையான கனடிய டொலர் 4100.00 உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. உதவுதொகை அளித்தோர் பெயர், உதவு தொகை ஆகிய விபரங்கள் Torontotamilchair.ca என்ற இணையதளத்தில் Donation பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலக்கழகச் சமூகம் எம்மிடம் பதாயிரம் டொலர்களை எதிபார்த்தபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக எம் உறவுகளைத்தொடர்புகொள்ள்ளவோ உரிய இலக்கினை அடையவோ முடியவில்லை. எனினும் நிலைமை சீரடையும்போது முயற்சியைத் தொடர எண்ணியிருந்தோம்.
தமிழ் இருக்கைக்குத் தேவையான மூன்று மில்லியன் டொலர்களில் அரைவாசியை அடைவதற்கே இன்னமும் சிறியதொகை தேவப்படுவதாகத் தெரியவந்தஉள்ளது. மீண்டும் வேகம் கொண்டு முயற்சியைத்தொடரவேண்டியுள்ளது. இது தொடர்பாக நான் அங்கம்வகிக்கும் மார்க்கம் முதியோர் சங்கத்து வாராந்தக் கூட்டத்தில் 11.10.2020 அன்று என் கருத்தினைப் பகிர்ந்துகொண்டேன். அதன் ஒலிவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. அதையும் கேழுங்கள்.
ரொறன்ரொ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கு புனித காரியமாக எமது பங்களிப்பையும் வழங்கவேண்டுமென எனது முகநூலிலும் எமது ஊர் இணையதளத்திலும் அவ்வப்போது எனது கருத்தினைத் தெரிவித்து வந்துள்ளேன்.
இணையதளத்தைபார்வியிட்ட எமது ஊரவர் ஒருவர் அட தானும் இந்த விடயத்தில் பங்குபற்றவேண்டுமே என உணர்ந்து என்னுடன் தொடர்புகொண்டார். தானும் உதவுவதாகக்கூறி, தான், தன் பிள்ளைகள் இருவர், முதியவரான தன் மாமியார் என தலா நூறு டொலர் வீதம் நானூறு டொலர்களை உடனேயே அனுப்பி வைத்துள்ளார்.
எமது முதியோர் எதிர்காலச் சந்ததியினருக்காக, எமது பேரப்பிள்ளைகளுக்காக கனடடிய அரசு தரும் மாதாந்த உதவுதொகையில் ஒரு, நூறு டொலர்களை ஒருமுறை தந்துதவுமாறு எனது முன்னைய பதிவில் கேட்டிருந்தேன். அதனைப்பார்வையிட்ட மேற்படி முதியவரும் அவரது பிள்ளைகளும் தாங்களாகவே முன்வந்து மேற்படி நானூறு டொலர்களை அனுப்பியிருப்பது என்னை மகிழ்வடைய வைத்துள்ளது. என்முன்னால் அவர்கள் உயர்ந்து நிற்கின்றனர்.
வார்த்தைகள் அல்ல, ஒருவரின் செய்கைகளே ஒருவரின் உயரத்தைத் தீர்மானிக்கின்றன.
பல ஆயிரம் டொலர்கள் உம்மிடம் இருந்தாலும் நீங்கள் சிறியவர்தான். அதில் ஒரு நூறு டொலர்களை அடுத்தவருக்கு உதவும்போது நீங்கள் பெரியவர் ஆகிவிடுகிறீர்கள்.
கொரனோ வியாதி இப்போதைக்கு எம்மைவிட்டுப் போவதாகத் தெரியவில்லை. அதற்காக அழுதுகொண்டு நாம் வாழாதிருக்க முடியுமா? நம் வாழ்வில் எத்தனை சவால்களை எதிரிகளைச் சந்திக்கின்றோம். எமக்கு இரு கைகள் உள்ளன. ஒரு கையில் தற்காப்புக் கேடயம். மறுகையில் வெல்வதற்கான கருவி. வாழ்வு வசப்படும்.
முயற்சித்தால் முடியாதது ஏதுமில்லை. பெரியவரின் பெரிய தொகையை விட சிறியவரின் சிறிய தொகை பெரிதானது. இப்போதெல்லாம் பணத்தை அனுப்புவது மிகச் சுலபமானது.எனது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் அடுத்தநொடியில் நீங்கள் உயர்ந்துவிடுவீகள். அனுப்பும்போது உங்கள் பெயரையும் சரியான முகவரியையும் குறிப்பிட மறக்கவேண்டாம். வரிவிலக்குக்கான பற்றுச் சீட்டு உங்கள் வீடு தேடிவரும்.
எனது மின்னஞ்சல் முகவரி – ponkanthavel@yahoo.com
மொன்றியல் உறவுகள் பலரும் உதவுதொகை வழங்குவதற்கு விரும்புவதாகவும் எனவே அவர்கள் இதுதொடர்பாக அங்கு வாழும் எமது உறவுகளான திரு பரமசிவத்துடனனோ (தொ.இல,(514 617 3150) அன்றி திரு நா.மகேந்திரனுடனோ (இல.514 683 6910) மற்றும் நா மகேசனுடனோ (இல. 416 949 1815) தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அல்லது தங்கள் விபரத்துடன் எனது மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கமுடியும்.
உங்கள் உதவுதொகையை முடிந்தால் 31.10.2020க்கு முன்பதாக அனுப்பிவைக்கும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இடைக்காடு மற்றும் வளலாய் என்பன சிறிய ஊர்தான், எதிர்காலத்தில் எமது செய்கைகள் எம்மைப் பெரியவர் ஆக்கும்.
அன்புடன்,
பொன் கந்தவேல் மற்றும் – 647 702 7346
சு. நவகுமர் (நந்தன்) – 416 525 6299
நா. மகேசன் – 416 949 1815
18.10.2020
வாழ்த்துகின்றோம்.
திருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார்
தோற்றம் – ஐப்பசி -20-1936 மறைவு- புரட்டாதி -14-2020 |
இடைக்காடு வடக்குகலட்டியைச் சேர்ந்த திருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இன்று (Sept 14, 2020) கனடாவில் இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் அமரர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அமரர்களான தாமோதரம்பிள்ளை + பாக்கியம் தம்பதிகளின் மூத்தமகளும் சுப்பர் + சிலம்பாத்தை தம்பதிகளின் மருமகளும், பத்மநாதன் + அமரர் ஸ்ரீஜெயமோகினி , அமரர் பாலசுப்ரமணியம் + நாகேஸ்வரி , மனோன்மணி + ஸ்ரீதட்சனா , அனந்தலக்சுமி + ஸ்ரீஜெயக்குமார் , இரகுநாதன் + வேல்விழி, திலகவதி + இரகுநாதன் , மகேந்திரன் + வள்ளி , கனகேந்திரன் + கஜனி , இரவீந்திரன் + சுனிதா , ஆகியோரின் தாயாரும் மாமியாரும், ஸ்ரீசிவசங்கரன் + யோகினி , கோகுலன் + ஆர்த்தி , இராகுலன் + பிருந்தா , சாரங்கன் , பாலகுகன் + அருந்ததி , ஜெயந்தி + ஜீவகன் , அமரர் சிந்துஜா , ஆர்த்தி + கோகுலன் , சங்கீத் , சோபினி, மீராஜா + நிர்மலன், சுஜேன், சிந்தூரன் , சுவஸ்திகா , அக்சனா, ஹரிதன் , அருஜனா, ஆகியோரின் அம்மம்மாவும் அப்பம்மாவும் ,
லக்சுமி, கவினன் , ஆரன், கபிதன், கீர்த்திகன், அகரன், சுவேதா , ஐஸ்வினி, பிரசாத், கவின், ஈசான் , ஆகியோரின் பாட்டியுமாவார். சிறீஸ்கந்தராஜா , அமரர் இராஜலக்சுமி, பரமேஸ்வரன் , அமரர் கதிர்காமநாதன் , சிற்றம்பலம், மல்லிகாதேவி , அமரர் லோகநாதன் , கந்தையா ஆகியோரின் சகோதரியும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
Visitation:
Friday September 18 – 6:00 pm to 9:00 pm
Visitation, Funeral Service & Cremation:
Saturday September 19 – 8:00 am – 10:00 am
Place:
Lotus Funeral & Cremation Center Inc
121 City view DR, Etobicoke
Important Note :
Due to COVID-19 pandemic, face mask is mandatory and must be worn all the time.
தகவல் :
இரகுநாதன் 905 470-0614
Meeting
திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம்
துயர் பகிர்வோம்
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா Perth, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமகாவும் கொண்ட இராஜேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா, சோமசுந்தரம்(முன்னாள் அதிபர்- நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி(Mississauga, கனடா), காலஞ்சென்ற சுந்தரராஜன்(பிரித்தானியா) மற்றும் சுந்தரராணி(கொழும்பு), சுந்தரகாந்தி(Perth, அவுஸ்திரேலியா), சுந்தரகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெட்சணாமூர்த்தி, நாளினி(பிரித்தானியா), கந்தசாமி, நடேசன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாம்பிகை ஆறுமுகம்(Scarborough) மற்றும் காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்-செல்லத்துரை, தங்கரத்தினம்-நாகலிங்கம், சின்னப்பாபிள்ளை- தம்பிமுத்து , தம்பி-தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளிநாயகி- சின்னப்பாபிள்ளை(இடைக்காடு), கமலாசினி-தம்பி(Scarborough) ஆகியோரின் மைத்துனியும்,
துளசி, அருண், பவன், சேன், அனோரா, சிந்து, மயூரி, பிருந்தன், ஆரபி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு குடும்பத்தினருடன் நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
நிகழ்வுகள்
- 6th Jul 2020 8:00 AM
- Monday, 06 Jul 2020 8:00 AM – 9:00 AM
- Monday, 06 Jul 2020 9:00 AM – 10:00 AM
- Monday, 06 Jul 2020 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19056298166
- Phone : +442084291974
- Phone : +94112597984
- Mobile : +61468630693
- Mobile : +19055648274