துயர்பகிர்வோம்
அன்னார்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தம்புச்சாமி நாகம்மா இன்று வெள்ளிக்கிழமை(30/05/2014) அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அருமைச்சகோதரியும் சின்னப்பிள்ளையின் உடன் பிறவாச்சகோதரியும் பாலசிங்கம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம், ஆகியோரின் மைத்துனியும் பரஞ்சோதி(கனடா), இராசதுரை(கனடா), சரோஜினிதேவி, சுசீலாதேவி(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஜீவபாஸ்கரி, முருகமூர்த்தி, ஈஸ்வரி, ஈஸ்வரலிங்கம், உதயகுமார், காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனமலர், திலகசக்தி, மற்றும் பராசக்தி, வெற்றிவேல், பர்வதசக்தி, ஆனந்தசக்தி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இன்று இடைக்காட்டில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
வெற்றிவேல்
Phone: +442085745720 (UK), +94774597351(Sri Lanka)