இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்
காலம் : பங்குனி 03 2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆசிரியர் அறப்பணி நிலையம், இடைக்காடு

சமூகம் அளித்தோர் விபரம்

  1. பேராசிரியர்.கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பழைய மாணவரும் இளைப்பாறிய கல்வியற் துறை பேராசிரியரும்)
  2. திரு.நாரயணபிள்ளை சுவாமிநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய உதவி கல்விப் பணிப்பாளரும்)
  3. திரு.வல்லிபுரம் வைத்திலிங்கம் (பழைய மாணவரும் இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தரும்)
  4. திரு.கந்தசாமி முருகவேல் (பழைய மாணவரும் இளைப்பாறிய வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  5. திரு.தம்பிராசா கிருபாகரன் (பழைய மாணவரும் வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  6. திரு.அரசகேசரி வேலாயுதர் (பழைய மாணவரும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும்)
  7. திரு.சின்னதம்பி கருணா (பழைய மாணவரும் நில அளவை அத்தியட்சகரும்)
  8. திருமதி.மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  9. திருமதி,பரமேஸ்வரி கதிரவேலு (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  10. திருமதி.ஆனந்தஈஸ்வரி நாகநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  11. திரு.ஜெயகுமார் சுப்ரமணியம் (பழைய மாணவர் – கனடா)
  12. திரு.சுதர்சன் செல்லத்துரை (பழைய மாணவர் – கனடா)
  13. திரு.நாரயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன் (பழைய மாணவர் – கனடா)
  14. திரு.நந்தகுமார் இராசையா (பழைய மாணவர் – ஐக்கிய இராச்சியம்)
  15. திரு.கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்து (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  16. திருமதி.பவானி கிருஷ்ணமூர்த்தி (பழைய மாணவர் – அவுஸ்ரேலியா)
  17. திருமதி.சிவச்செல்வி குகதாசன் (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  18. திருமதி.கோமளா கருணாகரன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  19. திரு.சிவகுருநாதன் கருணாகரன் (நலன் விரும்பி)
  20. திருமதி.வரதலட்சுமி ஸ்ரீவடிவேலு (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  21. திருமதி.தயவாதி சிவஞானசீலன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  22. திரு.செல்லத்துரை செல்வவேல் (பழைய மாணவரும் ஆசிரியரும்)
  23. திரு.சுப்பிரமணியம் செல்வகுமார் (பழைய மாணவரும் மாகாண உள்ளக கணக்கு உத்தியோகத்தரும்)
  24. திரு.கதிரவேலு நகுலன் (பழைய மாணவரும் பதவிநிலை முகாமைத்துவ உத்தியோகத்தரும்)
  25. திரு.கந்தசாமி கஐன் (பழைய மாணவரும் பழைய சங்க செயலாளரும்)
  26. திரு.சிவஞானம் கார்த்தீபன் (பழைய மாணவர், ஆசிரியர், பழைய சங்க பொருளாளர் மற்றும் கலைமகள் வாசிகசாலை தலைவர்)
  27. திரு.சிவஞானசுந்தரம் சிறிபதி (ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும்)
  28. திரு.கந்தசாமி கேதீஸ்வரன் (பழைய மாணவரும் இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும்)
  29. திரு.வை.கதிர்காமநாதன் (பழைய மாணவர்)

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அறிக்கை
2026 ஆம் ஆண்டு தை 16 ஆம் திகதி எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டு, அது தொடர்பாக புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
அதன் முதற் கட்டமாக ஆரம்பப் பிரிவில் சகல வசதிகளுடன் கூடிய ஆரம்ப பிரிவு கட்டடத்தை மூன்று மாடிகளாக கட்டலாம் என்ற எண்ணக்கரு முன் வைக்கப்பட்டது. அக் கருத்து வரவேற்கப்பட்டதுடன், மாற்று கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன அவை வருமாறு:
இடைநிலை பிரிவு பிரதான மண்டபம் மீள் புதுப்பித்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அமரர்.நமசிவாயம் அவர்களின் கட்டடம் மீள் திருத்த வேண்டிய அவசியம் பற்றி கூறப்பட்டது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாதிக்க முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
பாடசாலை மைதானம் உருவானதை போல எதையும் செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
இடைக்காட்டின் வரலாறு மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஆலோசிக்கப்பட்டது.
இடைக்காட்டின் வீதிகள் சீரமைக்கப்பட்ட பின் பெயரிடப்பட்ட வீதியாக மாற வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.
புலம் பெயர் உறவுகள் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்க முடியாது என்பதால், முன் பள்ளிக்கு குறிப்பிட்ட நிதி வழங்கியது பற்றி திரு க. முருகவேல் அவர்கள் தமது கருத்தை கூறினார்.
பேராசிரியர்.க.சின்னத்தம்பி பின்வரும் கருத்தை கூறினார். ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலை பிரிவிற்கு இடையேயான வீதியை மாற்றுவது மற்றும் அதன் கடினத் தன்மை பற்றி திரு.கருணா விளக்கமளித்தார்.
பாடசாலை மாணவர் எண்ணிக்கை அதிகரித்து சித்தி வீதம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனவும் உயர்தர பிரிவு விஞ்ஞானத்துறை அச்சுவேலி செல்ல வாய்ப்பு உள்ளது அதை தடுப்பதற்கான செயல்பாடுகளை எமது பாடசாலை சமூகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை திரு.கிருபாகரன் அவர்கள் கூறினார்.
எமது பாடசாலையின் சித்தி வீதம் யாழ் மாவட்டத்திலே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக திரு.அரசகேசரி அவர்கள் கூறினார்.
நூற்றாண்டு விழா ஞாபகார்த்த கட்டடம் கட்டுவது பற்றிய முடிவை எடுக்க திரு.முருகவேல் அவர்கள் வலியுறுத்தினார்.
வீதியை மாற்றுவது கடினமாகையால் ஏனைய செயற்பாடுகள் பற்றி கவனம் எடுக்க கலந்துரையாடப்பட்டது. யதார்த்தமாக செயல்பட வேண்டும் என பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பாடசாலை அழகு படுத்த வேண்டும், இருண்ட பாடசாலை போன்ற தோற்றத்தில் இருந்து வெளிச்சமான மகிழ்ச்சிகரமான அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை திரு.க.முருகவேல் அவர்கள் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திக்கு அனைவரது மனங்களும் மாற்றம் அடைய தக்க வகையில் செயல்படுத்த வேண்டுமென பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பொறியியல்துறை, நில அளவைத்துறை சார்ந்தவர்களுடன் முதலில் கலந்துரையாடி கட்டட அமைப்பு பற்றி தீர்மானித்து, அதன் அனுமதிக்காக திணைக்களங்களை அணுக வேண்டும். இந்த பொறிமுறை ஒழுங்கில் செயல்பட வேண்டும என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
நிதி செயற்பாடு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிதி செயற்பாடு பற்றி திரு.கிருபாகரன் அவர்கள் கூறுகையில் நிதி பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பிடப்படல் வேண்டும் என்ற கருத்தை கூறினார்.
எழுந்த மானமாக கட்டிடம் தெரிவு செய்யக்கூடாது அமைவிடம் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது
இறுதி முடிவாக ஆரம்பப் பிரிவு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். விழாவிற்கான நூல் வெளியீடு, போன்ற செயல்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருடன் இணைந்து கலந்துரையாடி முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதிபருடன் கதைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இக் கருத்துரையாடல் ஆரம்ப முயற்சியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமாகவும் இனிதே நிறைவு பெற்றது .அனைவரது கருத்து பரிமாற்றங்களும் உள் வாங்கப்பட்டு அடுத்த கட்ட கருத்தாளுகைக்காக எமது செயல்கள் ஆரம்பமாகிறது .
நன்றி மீண்டும் அடுத்த கருத்துப் பகிர்வுடன் சந்திப்போம்.

அதிபருடான கலந்துரையாடல் 01.04.2023
சமூகமளித்தோர்
திரு.கு.அகிலன் (அதிபர்)
திரு.கு.வாகீசன் (முன்னாள் அதிபர்)
திரு.அருந்தவநேசன் (முன்னாள் அதிபர்)
திரு.க.முருகவேல்
திரு.வே.அரசகேசரி
திரு.க.நகுலன்
திரு.க.கஜன்
திரு.சி.சிறிபதி
திரு.செ.செல்வவேல்
திரு.க.சூரியகாந்தன்
திரு.கஜேந்திரன்
கலந்துரையாடப்பட்ட விடயம் இணைக்கப்பட்டுள்ளது

This image has an empty alt attribute; its file name is picture_2-726x1024.jpg