தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ் இளைஞர்களால் சிநேகபூர்வ துடுப்பாட்ட, உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் மணமானவர் எதிர் மணமாகதோர் என்ற அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே வியாழக்கிழமை 4 மணியளவில் துடுப்பாட்டமும். வெள்ளிக்கிழமை 8 மணியளவில் கரப்பந்தாட்டமும், சனிக்கிழமை 5 மணியளவில்உதைபந்தாட்டம் என்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் இடைக்காடு இளைஞர் குழு அழைக்கின்றது.