இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா

இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்
காலம் : பங்குனி 03 2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆசிரியர் அறப்பணி நிலையம், இடைக்காடு

சமூகம் அளித்தோர் விபரம்

  1. பேராசிரியர்.கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பழைய மாணவரும் இளைப்பாறிய கல்வியற் துறை பேராசிரியரும்)
  2. திரு.நாரயணபிள்ளை சுவாமிநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய உதவி கல்விப் பணிப்பாளரும்)
  3. திரு.வல்லிபுரம் வைத்திலிங்கம் (பழைய மாணவரும் இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தரும்)
  4. திரு.கந்தசாமி முருகவேல் (பழைய மாணவரும் இளைப்பாறிய வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  5. திரு.தம்பிராசா கிருபாகரன் (பழைய மாணவரும் வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  6. திரு.அரசகேசரி வேலாயுதர் (பழைய மாணவரும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும்)
  7. திரு.சின்னதம்பி கருணா (பழைய மாணவரும் நில அளவை அத்தியட்சகரும்)
  8. திருமதி.மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  9. திருமதி,பரமேஸ்வரி கதிரவேலு (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  10. திருமதி.ஆனந்தஈஸ்வரி நாகநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  11. திரு.ஜெயகுமார் சுப்ரமணியம் (பழைய மாணவர் – கனடா)
  12. திரு.சுதர்சன் செல்லத்துரை (பழைய மாணவர் – கனடா)
  13. திரு.நாரயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன் (பழைய மாணவர் – கனடா)
  14. திரு.நந்தகுமார் இராசையா (பழைய மாணவர் – ஐக்கிய இராச்சியம்)
  15. திரு.கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்து (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  16. திருமதி.பவானி கிருஷ்ணமூர்த்தி (பழைய மாணவர் – அவுஸ்ரேலியா)
  17. திருமதி.சிவச்செல்வி குகதாசன் (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  18. திருமதி.கோமளா கருணாகரன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  19. திரு.சிவகுருநாதன் கருணாகரன் (நலன் விரும்பி)
  20. திருமதி.வரதலட்சுமி ஸ்ரீவடிவேலு (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  21. திருமதி.தயவாதி சிவஞானசீலன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  22. திரு.செல்லத்துரை செல்வவேல் (பழைய மாணவரும் ஆசிரியரும்)
  23. திரு.சுப்பிரமணியம் செல்வகுமார் (பழைய மாணவரும் மாகாண உள்ளக கணக்கு உத்தியோகத்தரும்)
  24. திரு.கதிரவேலு நகுலன் (பழைய மாணவரும் பதவிநிலை முகாமைத்துவ உத்தியோகத்தரும்)
  25. திரு.கந்தசாமி கஐன் (பழைய மாணவரும் பழைய சங்க செயலாளரும்)
  26. திரு.சிவஞானம் கார்த்தீபன் (பழைய மாணவர், ஆசிரியர், பழைய சங்க பொருளாளர் மற்றும் கலைமகள் வாசிகசாலை தலைவர்)
  27. திரு.சிவஞானசுந்தரம் சிறிபதி (ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும்)
  28. திரு.கந்தசாமி கேதீஸ்வரன் (பழைய மாணவரும் இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும்)
  29. திரு.வை.கதிர்காமநாதன் (பழைய மாணவர்)

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அறிக்கை
2026 ஆம் ஆண்டு தை 16 ஆம் திகதி எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டு, அது தொடர்பாக புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
அதன் முதற் கட்டமாக ஆரம்பப் பிரிவில் சகல வசதிகளுடன் கூடிய ஆரம்ப பிரிவு கட்டடத்தை மூன்று மாடிகளாக கட்டலாம் என்ற எண்ணக்கரு முன் வைக்கப்பட்டது. அக் கருத்து வரவேற்கப்பட்டதுடன், மாற்று கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன அவை வருமாறு:
இடைநிலை பிரிவு பிரதான மண்டபம் மீள் புதுப்பித்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அமரர்.நமசிவாயம் அவர்களின் கட்டடம் மீள் திருத்த வேண்டிய அவசியம் பற்றி கூறப்பட்டது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாதிக்க முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
பாடசாலை மைதானம் உருவானதை போல எதையும் செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
இடைக்காட்டின் வரலாறு மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஆலோசிக்கப்பட்டது.
இடைக்காட்டின் வீதிகள் சீரமைக்கப்பட்ட பின் பெயரிடப்பட்ட வீதியாக மாற வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.
புலம் பெயர் உறவுகள் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்க முடியாது என்பதால், முன் பள்ளிக்கு குறிப்பிட்ட நிதி வழங்கியது பற்றி திரு க. முருகவேல் அவர்கள் தமது கருத்தை கூறினார்.
பேராசிரியர்.க.சின்னத்தம்பி பின்வரும் கருத்தை கூறினார். ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலை பிரிவிற்கு இடையேயான வீதியை மாற்றுவது மற்றும் அதன் கடினத் தன்மை பற்றி திரு.கருணா விளக்கமளித்தார்.
பாடசாலை மாணவர் எண்ணிக்கை அதிகரித்து சித்தி வீதம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனவும் உயர்தர பிரிவு விஞ்ஞானத்துறை அச்சுவேலி செல்ல வாய்ப்பு உள்ளது அதை தடுப்பதற்கான செயல்பாடுகளை எமது பாடசாலை சமூகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை திரு.கிருபாகரன் அவர்கள் கூறினார்.
எமது பாடசாலையின் சித்தி வீதம் யாழ் மாவட்டத்திலே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக திரு.அரசகேசரி அவர்கள் கூறினார்.
நூற்றாண்டு விழா ஞாபகார்த்த கட்டடம் கட்டுவது பற்றிய முடிவை எடுக்க திரு.முருகவேல் அவர்கள் வலியுறுத்தினார்.
வீதியை மாற்றுவது கடினமாகையால் ஏனைய செயற்பாடுகள் பற்றி கவனம் எடுக்க கலந்துரையாடப்பட்டது. யதார்த்தமாக செயல்பட வேண்டும் என பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பாடசாலை அழகு படுத்த வேண்டும், இருண்ட பாடசாலை போன்ற தோற்றத்தில் இருந்து வெளிச்சமான மகிழ்ச்சிகரமான அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை திரு.க.முருகவேல் அவர்கள் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திக்கு அனைவரது மனங்களும் மாற்றம் அடைய தக்க வகையில் செயல்படுத்த வேண்டுமென பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பொறியியல்துறை, நில அளவைத்துறை சார்ந்தவர்களுடன் முதலில் கலந்துரையாடி கட்டட அமைப்பு பற்றி தீர்மானித்து, அதன் அனுமதிக்காக திணைக்களங்களை அணுக வேண்டும். இந்த பொறிமுறை ஒழுங்கில் செயல்பட வேண்டும என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
நிதி செயற்பாடு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிதி செயற்பாடு பற்றி திரு.கிருபாகரன் அவர்கள் கூறுகையில் நிதி பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பிடப்படல் வேண்டும் என்ற கருத்தை கூறினார்.
எழுந்த மானமாக கட்டிடம் தெரிவு செய்யக்கூடாது அமைவிடம் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது
இறுதி முடிவாக ஆரம்பப் பிரிவு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். விழாவிற்கான நூல் வெளியீடு, போன்ற செயல்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருடன் இணைந்து கலந்துரையாடி முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதிபருடன் கதைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இக் கருத்துரையாடல் ஆரம்ப முயற்சியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமாகவும் இனிதே நிறைவு பெற்றது .அனைவரது கருத்து பரிமாற்றங்களும் உள் வாங்கப்பட்டு அடுத்த கட்ட கருத்தாளுகைக்காக எமது செயல்கள் ஆரம்பமாகிறது .
நன்றி மீண்டும் அடுத்த கருத்துப் பகிர்வுடன் சந்திப்போம்.

அதிபருடான கலந்துரையாடல் 01.04.2023
சமூகமளித்தோர்
திரு.கு.அகிலன் (அதிபர்)
திரு.கு.வாகீசன் (முன்னாள் அதிபர்)
திரு.அருந்தவநேசன் (முன்னாள் அதிபர்)
திரு.க.முருகவேல்
திரு.வே.அரசகேசரி
திரு.க.நகுலன்
திரு.க.கஜன்
திரு.சி.சிறிபதி
திரு.செ.செல்வவேல்
திரு.க.சூரியகாந்தன்
திரு.கஜேந்திரன்
கலந்துரையாடப்பட்ட விடயம் இணைக்கப்பட்டுள்ளது

This image has an empty alt attribute; its file name is picture_2-726x1024.jpg

இனிய புத்தாண்டு

சித்திரை புத்தாண்டை கொண்டாடும் அனைத்து சகோதர நண்பர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இடைக்காடு உறவுகள் அங்கு வாழ்கின்ற விவசாய பெருமக்கள் அனைவருக்கும் இடைக்காடு வலைய இணைய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ் புது வருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ்

தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ் இளைஞர்களால் சிநேகபூர்வ துடுப்பாட்ட, உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் மணமானவர் எதிர் மணமாகதோர் என்ற அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே வியாழக்கிழமை 4 மணியளவில் துடுப்பாட்டமும். வெள்ளிக்கிழமை 8 மணியளவில் கரப்பந்தாட்டமும், சனிக்கிழமை 5 மணியளவில்உதைபந்தாட்டம் என்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் இடைக்காடு இளைஞர் குழு அழைக்கின்றது.

கல்வி சுற்றுலா

யா/ இடைக்காடு மகா வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் 2022., மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா.

புலம்பெயர்ந்த தேசங்களில் நம்மவர்களின் கூத்துக்கள்

வருகின்ற சில நாட்களுக்கு குளிர் நாட்களாகவே  இருக்கப் போகின்றது., இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து செல்வது தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அனைவருடைய தினசரி வாழ்க்கையாக அமைந்துள்ளது .இந்த வகையிலே இன்றைய கருத்தாடல்களில் உன்னிப்பாக நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலே அவதானித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விளைகின்றோம் .குறிப்பாக ஒரு மனிதனுடைய வாழ்வில் முழுமை பெற்று இறுதியாக அவனுடைய வாழ்வை இவ்வுலகில் முடித்துச் செல்லும்போது தமிழ் சமூகங்களிலே மேன்மையான இறுதி வணக்கங்களையும் அல்லது அவர்களுக்குரிய மரியாதைகளையோ நாங்கள் செலுத்துவது வழமையான ஒன்று. அந்த வகையிலே இங்கு நாங்கள் உன்னிப்பாக அவதானித்த சில விடயங்களை வெளிக்கொண்டு வருவது எமது கலாச்சாரத்தை எமது  பழக்க வழக்கங்களை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகவே உணர்கின்றோம். 

 இறுதி வணக்கத்துக்கு அல்லது அஞ்சலி செலுத்தும் மண்டபத்துக்கு நாம் செல்லும்போது அவதானித்த சில விடயங்களை பார்ப்போம்.

ஆண்கள் வெள்ளை சட்டை அல்லது கருப்புச்சட்டை அதனுடன் கருப்பு நிறத்தில் ஆன முழுகால் சட்டை  அணிந்து வருகிறார்கள்’ ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் செல்லும்போது தலையில் தொப்பி, அதற்கு மேலே குளிருக்கு போடுகின்ற ஓவர் கோட், கண்ணாடியை தலைக்கு மேலே வைத்தல், பாத அணிகளுடன் அந்த இடத்திற்கு செல்லல், மேலும் இரண்டு பட்டனை சட்டையிலிருந்து கழட்டி மேலும் அதற்கு மேலே ஒரு ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அந்த அஞ்சலிக்கு அவர்கள் செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.

சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் நாங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் அல்லது பேருந்துக்கு செல்வதற்கோ அல்லது அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு ஒழுங்கு முறையில் மற்றவர்களை மதித்து நடக்க  பழகிய நாங்கள் எமது கலாச்சாரமும் ஒரு அஞ்சலிக்காக செல்கின்ற இடத்தில் ஒரு கோமாளிக்கூத்தாக நடப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாமா?

இங்கு எவ்வளவோ அதீத வசதிகள் உள்ள ஒரு தேசம் ,மண்டபத்துக்கு குளிர்காலத்தில் வெப்பமூட்டியும், ஓவர் கோட்  வைப்பதற்கு  அதற்குரிய வசதிகளும்,பாதணிகள் பத்திரமாக கழட்டி வைப்பதற்குரிய இடங்களும், இன்னோரன்ன சகல  வசதிகள் உள்ள இத் தேசத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஒரு மனிதனுடைய இறுதி அஞ்சலிக்கு நாங்கள் செய்கின்ற  செயல்களை என்னவென்று சொல்வது??!!! உறவுகளே! சிந்திப்போம்!! தாய்க்குலத்துக்கு தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுமையாக கலாச்சாரத்தையும் அவர்களுக்குரிய அஞ்சலிகளையும் செவ்வனே செய்கின்றார்கள்., என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.வருகின்ற கிழமையும் உறவுகளின் அஞ்சலிக்காக நாம் சந்திக்க இருக்கின்றோம். புதிய ஒரு அத்தியாயத்தை உங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம் நன்றியுடன் .

கடுமையான பனிப்புயலால் ரொறன்ரோ

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் தலைநகரான ரொறன்ரோவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றது.

பனிப்புயல் காரணமாக பஸ் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் வீதிகள் முற்றாக மறைந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை.பாதிப்படைந்துள்ளது.

இடைக்காடு ம.வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் இடைக்காடு ம.வி தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்.

35 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 70 புள்ளிகளுக்கு மேல் 94.28 வீதம்(%) மாணவர்களும்.,
100 புள்ளிகளுக்கு மேல் 82.85 வீதம்(%) மாணவர்களும்.,
12 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெற்றோர்களுக்கும், பரீட்சையில் சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கு இடைக்காடுவலை இணையத்தின் வாழ்த்துக்கள்.

மதிவாணன் அக்சயா – 183
சிறிபதி திசானி -174
யுஸ்ரின் கென்றி -172
சிறிசேதுபரன் றட்சிகா -169
திலீபன் தரணிகா -167
சத்தியசீலன் கபிசன் -166
ருபிதரன் அகாஸ்ரெனின் -160
இராகவன் துசந்தி -157
றயினோல்ட் சுவேதா -156
அருள்ரூபன் திசானி – 151
நகுலன் கேசகி -144
கணேசவேல் கபித் – 144

தகவல் : பழைய மாணவன்

வரவேற்பு விழா

யா/இடைக்காடு மகாவித்தியலயத்திற்கு புதிய அதிபராக திரு. குமாரசாமி அகிலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு 19.12.2022 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வினை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தியிருந்தது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் எமது பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பெற்றோர்கள்,வெளி நாட்டு வாழ் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

வரவேற்பு உரையினை தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர், திருமதி.க. லலீசன், ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திரு. க. முருகவேல், எமது பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான திரு. அ. அருந்தவனேசன், திரு. கு. வாகீசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. நா. சுவாமினாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ச. ஶ்ரீபதி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. கஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

இறுதியாக புதிய அதிபரின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.

எமது பாடசாலையின் புதிய அதிபரை இடைக்காடுவலை இணையமும் வாழ்த்தி மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வோமாக…

அதிகாலைப் பொழுது

அதிகாலை கனடாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது .இன்று உயர்தர மாணவர்களுக்கான பரிட்சைகள் ஆரம்பம்., எமது மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் தங்களுடைய திறமைகளை காட்டி பரீட்சைகளை எதிர்கொள்வதற்கு நாம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் உறுதுணையாகவும் இருப்போமாக.